யூ ஆர் அனந்தமூர்த்தி பினத்தலில் இருந்து ஒரு முத்து? ” மசூதிகள் மற்றும் கோவில்கள் , தீவிரவாதம் புனையும் இடமாக மாறி வருவதை கண்டு, மனம் புண்படுகிறது ”
இப்படி தான் இடைசொருகலில் பொய்களை விதைக்கப்பபடுகின்றன.
யூ ஆர் அனந்தமூர்த்தி பினத்தலில் இருந்து ஒரு முத்து? ” மசூதிகள் மற்றும் கோவில்கள் , தீவிரவாதம் புனையும் இடமாக மாறி வருவதை கண்டு, மனம் புண்படுகிறது ”
இப்படி தான் இடைசொருகலில் பொய்களை விதைக்கப்பபடுகின்றன.
எழுதி ரொம்ப நாள் ஆகி விட்டாலும் , அந்த ஆசை இன்னும் விடவில்லை. எப்படியாவது ரெண்டு வரி , படிக்கிற மாதிரி இருந்தா சந்தோஷம்.
சமிபத்திய வெடிகுண்டு நிகழ்வுகள் எதுவும் நல்லத்துக்கு என்று தோனுது. வெகுளித்தனம் என்பது என் அடுப்பங்கரை வரை தான் , என் அடி வயிரை தொட்டால், என்று மக்கள் உணரும் வரை , இந்த திருவிழா தொரட்டும்.
கடந்த முன்று மாதங்களாக நடந்த விளையாட்டு திருவிழா (அதான் IPL ,French Open, Wimbledon, EURO 2008 ), இல்லாமல் சேனல் மாற்றம் யுக்தி இல்லாமல் தவிக்கிறது எங்கள் வீட்டு ரிமோட். எல்லாம் ஒலிம்பிக்ஸ் வரும் வரை தான்.
ஆடி காத்து , உஸ்மான் ரோடு அழைத்தது. ஆனால் அந்த பழைய பொலிவு இல்லை. இங்கே CMH ரோடும் மரங்கள் இல்லாமல் கலை இழந்து நிற்கிறது. பெங்களுரும் , நகரமயமாக்கலுக்கு (உச்சகட்ட) தப்பவில்லை.
இந்த பாடலுக்கு மூன்றாவது சரணம் இருந்தால். இதோ என் கற்பனை முழுப்பாடலுடன்.
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமேனடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே…
கண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இங்கு சிதறிபோன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீவளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
மின்னலே என் வானம் உன்னை தேடுதே…
பால்மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீவளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
மின்னலே என் வானம் உன்னை தேடுதே…
விழித்திரையில் தெரிவதெல்லாம் வெள்ளை மேகமே
வழிதோறும் தேடுகின்றேன் உயிரின் முகமே
கவிதைகளில் வாழ்த்தி நின்றேன் உன்னை மட்டுமே
கானல் நீராய் கரைந்து போனேன் உன்னில் மட்டுமே
கண்ணீரில் தீவளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
மின்னலே என் வானம் உன்னை தேடுதே…
நியுயார்க் நகரம் உறங்கும் நேரம்
நியுயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ தனிமை தனிமையோ கொடுமை கொடுமையே
பேச்செல்லாம் தாலாட்டுப் போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
நிலவும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை அவள் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதே
வான் இங்கே நீலம் அங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ
நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா
சில்லென்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர்காலம் கோடை ஆனதேனோ
வா அன்பே நீயும் வந்தால் செந்தணல் கூட பனிகட்டி போல மாறும் அன்பே
பாடல் : கவிஞர் வாலி
இசை : ரகுமான்
படம் : சில்லுன்னு ஒரு காதல்
மாசாமாசம் நான் படியேறும் இசைக்கோயில். இளையராஜாவின் பாந்தமான முகமும், மைக்கேல் ஜாக்ஸ்சனின் கத்திரி முடியும் ஒருங்கே காட்சிச்தரும் உற்சவத் தேரோட்டம்.
இது என்ன பாட்டு ஜிக்கு புக்கு ரெயிலு ஒண்ணுமே புரியல, இங்கிலீஷ் பாட்டு மாரி இருக்கு.
இது மைக்கேல் ஜாக்ஸ்சன் சரி , அது யார் ஜானட்?
எவ்வளவு தடவ சொல்றது கடைசிலே இங்கிலீஷ் போடாதீங்க, கேப் இருந்தா பரவால்ல.
எத்தன கேஸட் போட்டாலும் தீராது ,மொட்ட மொட்டதான்.
பாக்கெட் மணி இல்லாட்டாலும் ரெக்கார்டு புக் வாங்கணும்ன்னு சொல்லிட்டு ஒரு 60க்கோ ஒரு 90க்கோ பாட்டு லிஸ்ட் எழுதி கொடுத்துட்டு வருவோம். டிரிபிள் கொஞ்சம் போதும் , பேஸ் அதிமாக வேணும் இப்படி ஏகப்பட்ட அறிவுரைகள் காதில் வாங்கப்படாது என்று தெரிந்தும் கொட்டி விட்டு வருவோம்.
பதிவாயிட்டு வரும் வரையில் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள். 23 ஜீலை திபாவளி பட ரிலீஸ் போல பரப்பரப்பு பற்றிக் கொள்ளும். கேஸட் கவர் புதுப் பொண்டாட்டி போல் அள்ளி கொள்வோம். எழுத்து கூட்டி படிக்காத குறையாக, எந்த கேஸட் கம்பெனி என்பது வரை ஆராய்வோம்.
ரிலீஸ் தேதி அன்று வீடே களேபரபடும். பட்டியலின் படி வரிசையாக பதிவாகவில்லை என்றால் அதுக்கும் அன்றே ஒரு நடை.
நான் சொன்னது மூணாவது பாட்டு, இதில நாலாவது பேத்தாஸ் ஸாங் ரெக்கார்டாகி இருக்கு. இப்பவே மாத்தி கொடுங்க.
உங்க அதிர்ஷ்டத்தைப் பொருத்து அன்று யேசுதாஸின் ரசிகர் வராமல் இருந்தால், அப்பா (கடை ஒனர்) பிஸியாக இல்லாமல் இருந்தால், உங்கள் கேஸட் புதியதாக இருந்தால்.
தொடரும் ..