பொதுAugust 29, 2005 4:33 pm

இன்று மதியம் மூன்று மணியளவில் அவர் பதிவு ஒன்று பதிப்பபட்டதாக ப்ளாக்லைன்ஸ் தெரிவிக்க விஜயநகரம் சென்றேன். பாலா என்ற நண்பர் அவருக்கு பதிலாக அந்த அதிர்ச்சி தகவலை பதித்திருந்தார். உடனே அவர் பெங்களுர் நண்பர்கள் சிலர் பேருக்கு மடல் செய்தேன். சோடா பாட்டில் பாலாவிடம் இருந்து பதில் வந்தது. அவர் சாதிக் என்ற நண்பரின் செல்பேசச்சொன்னார். சாதிக்கும் அண்ணா பல்கலை கழக மாணவர் தான். நடந்தது இதுவே. (more…)

பொது 2:07 pm

vijayanagar karthik

பல பேருக்கு தெரிந்தவர், வலைப்பூவின் ஆசிரியர் , டெல் நிறுவனத்தின் ஊழியர் , வருங்கால எழுத்தாளர், பொன்னியின் செல்வர் இப்போது இல்லை. கடந்த வெள்ளியன்று விபத்து அடிப்பட்டு …..

யாருமே வலைப்பதிவுல இதுதான் கடைசி பதிவுன்னு எதையும் போடத்தில்லன்னு நினைக்கிறேன். நிகழ்ந்தே விட்டது.

நல்ல வரலாற்று எழுத்தாளராக வளர வேண்டியவரின் வாழ்க்கை அவசரமாக முடிக்கப்பட்டு விட்டது.

அன்னாரை பிரிந்து வாடும் அனைத்து உள்ளங்களுக்குமு எமது ஆழ்ந்த வருத்தங்கள் கண்ணீருடன்

அவரின் கடைசி பதிவு

சினிமாAugust 28, 2005 7:22 am

fazil

நிறைய எதிர்பார்க்க வில்லையென்றாலும் கண்ணுக்குள் நிலவு ஏற்படுத்திய ஏமாற்றம் இன்னும் மறையவில்லை. இளையராஜா, ஆனந்த குட்டன், பாசில் கூட்டணியில் மற்றுமொரு படைப்பு ஒரு நாள் ஒரு கனவு. (more…)

பொது 6:03 am

Click Here

சீனாவுக்கு சரி என படுவது வங்காளத்து அபத்தமாம். இதில் வெட்கக் கேடு என்னவெனில் , கடந்த காலத்தை மறந்து கம்யூனிஸ்டுகள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமாம். புழுதி கூட்டத்தில் இருந்து கொண்டு சட்டை அழுக்காகிறது என்று கதறகிறார் புத்ததேவ். இவர்கள் பேசாமல் சீன குடியுரிமை வாங்கி கொள்ளலாம்.

கவிதைAugust 26, 2005 5:22 pm

பார்கவும் வேண்டாம்
கேட்கவும் மாட்டேன்
வாங்கிடலாம் - தொட்டு விடும் தூரம்
வச பாட வசதிதான் பாவம்
முடியாத ப்ரசனை - சுற்றும் முட்கள்
இலைகளின் வேதனை
பரிவர்த்தனை பரிபாஷை
பாந்தாமாய் பாரங்கள்

பொதுAugust 24, 2005 11:15 am

ego

சுடச்சுட வருது இந்த ரிப்போர்ட். வழக்கமா ஆரிய பவன்ல வெஜ் புலாவ் சாப்பிடர நா இன்னிக்கி பராத்தா ஆர்டர் பண்ணினேன். கூடவே ஆலு கரி வேற, எக்ஸ்ட்ரா கரி ஆர்டர் பண்ண வேண்டாமா? நல்லது சாமி, இனி தெனைக்கும் இதுதான் நமக்கு மதிய உணவு. சரி தலைப்ப பத்தி ஆரம்பிக்கிறேன் (more…)

பொதுAugust 23, 2005 4:41 am

அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அண்ணாச்சின்னு சொன்னா தப்பா?
முதல் சீன் பாத்த மாதிரி இருக்குங்க
அஞ்சு நிமிஷத்துக்கு அஞ்ச அஞ்ச தடவ அண்ணாச்சின்னு சொன்னா தப்பா?
முதல் அஞ்சு நிமிஷம் பாத்த மாதிரி இருக்குங்க
எப்பவும் எல்லாரும் அண்ணாச்சின்னு சொன்னா தப்பா?
தாஸ் படம் பாத்த மாதிரி இருக்குங்க

கவிதைAugust 22, 2005 4:12 pm

படபடத்தது கண்கள்
படர்ந்தன வானெங்கும்
உயர்ந்தன புருவங்கள்

எல்லாம் சுருள் சுருளாக
இருக்கட்டும் என் பங்காக

நகைக்க ஒன்று
புகைக்க இணங்கு

பார்வை பழுது
பாவம் விழுது

பருவ கோளாறு
பலன் இராது

கவிதைAugust 20, 2005 5:27 pm

Darwinism

பத்து போதும் என்றார்கள் விளையாட்டை நிறுத்தினான்
பன்னிரெண்டு வேண்டும் என்றார்கள் பொறுமை காத்தான்
நாலே வருடம் நறுக்கென முடியும்
இருக்கட்டும் இதுவும்
இதற்கும் தலையசைத்தான்

பணிவாய் நடப்பாய் பலதும் கற்பாய்
படிகள் பலவும் விரைவாய் கடப்பாய்
உனதே உலகம் பொறுப்பாய் தலைவா

கலி முத்தியது காயும்
அம்மா இன்னும் என்ன?

பொறு மகனே - பொறுக்கனும்

போடங்கடா நீங்களும் உங்க டார்வினிஸமும்

பொதுAugust 19, 2005 10:50 am

ஒரு நிமிடமா ஒரு நிமிடமா
அன்பே அன்பே

ஆமா இதோ வந்துட்டேன் இன்னும் நாலு மாசந்தான் இருக்கு, அது வரைக்கும் வெயிட் பண்ணு.

பூமியின் சுழற்சியைக் கொண்டுதான் நமது கடிகாரம் ஒடுகிறது என்றாலும் அதை கண்காணிக்க அடாமிக் க்ளாக் வைத்திருக்கிறார்கள். சில சமயம்
விண்வெளியில் வினோத நிகழ்வுகளால் மாறுபட்டால் இவை இரண்டும் மாறுபட்டு நிற்கும். அப்போது நம்ம அடாமிக் அண்ணாச்சி முழித்து கொண்டு ஒன்றோ இரண்டோ நிமிடம் தன்னை அட்ஜெஸ்ட செய்து கொள்வார். இது நிகழும் நேரம் இவ்வருட கடைசியில் நள்ளிரவில். காரணம் பூமி மெதுவா சுத்துதான். பால் குடிக்கும் பிள்ளைகள் தவிர உறங்காது கண் விழித்து புது வருடத்தை வரவேற்கும் என்னை மாதிரி அப்பிராணிகள், ஒரு நிமிடம் வீணாவதை நினைக்காமல் , இந்த அரிய மாற்றத்தை உன்னிப்பாக கவனிக்கவும்.

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக்கவும்

கவிதைAugust 18, 2005 4:26 pm

பார்த்து ரசிக்கிறேன்
படிக்க அலைகிறேன்
பிடித்ததை சேமிக்கிறேன்

எண்ணங்களை கோர்க்கிறேன்
எழுத விழைகிறேன்
அயர்ந்து விடுகிறேன்

இன்றும் ஒருமுறை

கவிதைAugust 10, 2005 5:44 pm

Clock

சூரியன் ஆறு மணிக்காம்
குளியல் ஏழாம்
செல்வாய் எட்டு

உறங்கியது பதி ஒன்று
உண்டது பத்து
வந்தது ஒன்பது விழித்ததும்

கவிதைAugust 9, 2005 3:55 pm


எல்லாம் நடக்கிறது
படிப்பதும் பதிவதும்

திரட்டினாற் அறநூறு
வளர்ந்திடும் நிதம் நூறு

தீராமல் காலசுவட்டில்
கணையில் ஆழ்ந்து

இலக்கின்றி தேடினேன்
வலைப்பதிக்கிறேன்

கவிதை 9:38 am


மதிய நேரங்களில் தூங்கியும்
மற்ற நேரங்களில் சாப்பிட்டும்
மாலையில் மெல்ல வீதி வழியே

சின்னதாய் மாற்றங்கள்
நுணுக்கமாய்

தூக்கத்திற்கு மூன்று
சாப்பிட இரண்டு
வலம் வர ஒன்று
இருபத்திரண்டை இரண்டு நாட்களில் நிரப்ப முயல்கிறேன்

கவிதைAugust 5, 2005 11:38 am

முடிவுற்றாலும் மறக்கவில்லை
முறிந்தாலும் மறந்தில்லை
மறைத்து வைக்கிறேன் உன்னோடு உறவாய்
உறைவிலிருக்கும் வாளாய்

பினாத்தல்August 1, 2005 8:04 am

நிஜம்மா அப்படின்னு நீங்க கேக்கறது எனக்கு புரியுது. நேத்து லாண்டமார்க் போயிருந்தேன். நம்ம தான் இப்ப புத்தகப்புழு ஆகிடோம்ல. கடசியா வாங்க புஸ்தகம் இன்னும் பாதி பக்கம் படிக்காம இருக்க, புழுக்கு பசிக்க ஆரம்பிச்சிருச்சு. புதுசா புஸ்தக வாங்க போன யடத்துல பெரிய அதிர்ச்சி. அதிர்ச்சிக்கு காரணம் , ரண்டு வார முன்ன பிக் பாங்க் வாங்க வந்தப்ப அங்க ஓரே காப்பிதான் இருந்துச்சு. ஆனா நேத்து வரிச வரிசயா அடுக்கி வச்சிருந்துச்சு. அத பாக்கையில நமக்கு ஓரே குஷிதான். அதத்தான் நானு சொல்ல வரேன். நா தொட்டதெல்லாம் தொலங்குதுன்னு :)