சுருக்கமா தமிழ் கல்யாணம்.மாப்பிள்ளையின் தந்தை கழக பின்ணணி கொண்டவர். நினைவு தெரிந்த நாள் முதல் இவரின் வர்ணங்கள் கறுப்பு, சிவப்பு மட்டுமே. வை.கோ உரை என்றால் கொள்ளை பிரியம். விடுதலை , உண்மை இவர் வீட்டில் தான் நான் முதலில் கண்டது. எழுபதுகளில் இவர் தொடங்கிய கழக முயற்சிகள் எல்லாம் இன்றும் கவனிக்கப்படவில்லை. பேராசியர் அன்பழகன் அடிக்கடி எங்கள் வாதங்களில் தவறாமல் இடம் பெறுவார். திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் வரவேற்ப்பறையில் இடம். இப்போது உடல் நலம் குன்றியதால் நண்பரின் தந்தை மாறத்தான் செய்தார். குடும்ப பாரம்பரியம் தடுத்தாலும் தாலிக்கு இடம் தந்தது ஆச்சரியம்தான்.