
என்னதான் மூன்று வருடத்திற்கு மேல் புழங்கிய ஊராக இருந்தாலும் அன்னியமாக பட்டது சென்னை. 14 மணி நேரம் பயண களைப்பு கத்தி பாறை சிக்னலில் மறைந்தது. நேரு மாமாவும் மறைந்திருந்தார் ஒரு பாலத்திற்காக. ஊர் சுற்ற ஏதுவாக மவுண்ட ரோடு செல்லும் பஸ் ஒன்றில் தொத்திக்கொண்டேன். மாற்றங்கள் பெரிதாக நிகழவில்லை என்பதில் உள்ளுக்குள்ளே குரூர மகிழ்ச்சி. மறந்த பஸ் நம்பர்கள் சட்டென நினைவுக்கு வந்தன. ரொம்பவும் படுத்தியது D70. (more…)
