ரயில் எவ்வளவு வேகமா போனாலும் கடைசி பெட்டி கடைசியாத்தான் போகும்.
செல்லுல balance இல்லனா கால் பண்ண முடியாது, ஆனா… மனுஷனுக்கு கால் இல்லன்னா balance பண்ண முடியாது.
பஸ் போய்ட்டா பஸ் stand அங்கயே தான் இருக்கும் , ஆனா சைக்கிள் போய்ட்டா சைக்கிள் stand கூடவே வரும்.
Filesன்னா ஒக்காந்து பாக்கணும் ,ஆனா Pilesன்னா பாத்து ஒக்காரணும்.
கட்டில் ஒடஞ்சா படுக்க முடியாது, கண்ணாடி ஒடஞ்சா பாக்க முடியாது, ஆனா முட்டை ஒடஞ்சா தான் ஆம்லெட் போட முடியும்.
வாயால நாய்ன்னு சொல்ல முடியும் ,ஆனா நாயால வாய்ன்னு சொல்ல முடியுமா?
பானை காலியா இருந்தாலும் ஓட்ட இல்லாம இருந்தாதான் மதிப்பு.
ஒரு கடலே இருந்தாலும் கையில டம்ளர் இருந்தா ஒரு டம்ளர் தான் புடிக்க முடியும்.
நேரம் சரியில்லன்னா ஒட்டகத்து மேல ஒக்காந்தாலும் நாய் கடிச்சு வைக்குமாம்.

pottu thaaku thalivaa
Comment by Dev — December 12, 2005 @ 10:21 am
என்ன பொன்மொழிகள் ஈஸ்வர். இதெல்லாம் எங்கருந்து பிடிக்கிறது?
Comment by கோ.இராகவன் — December 12, 2005 @ 12:06 pm
arumaiyana ponmoligal.enakku migavum pidichirukku.
Comment by r.chinnasamy — December 17, 2005 @ 8:13 am
yengeyho poiyitapa.
Comment by meksen — June 8, 2007 @ 3:40 am