சித்திரமும் கைப்பழக்கம், எந்தமிழும் பளாக் பக்கம்

நிஜமாகவே மறந்து போய்டுமோன்னு பயமா இருக்கு. பழைய பதிவுகளை பாத்ததுக்கப்புறம் ஒரு தெம்பு. அட நாம கிறுக்கனாதா இதுன்னு ஒரு கிளுகிளுப்பு. இந்த சாக்குல ஒரு பதிவு ரெடி.
தொடர்ந்து எழுதாததற்கு காரணம் கம்பெனி மாறுனது தான். என்னோட தமிழ் தரவுகள் எல்லாம் காலி. முரசு ப்ள்க்கின் நோட்பேடில் ஏனோ வேலை செய்ய மறுக்கிறது. சுரதா கொஞ்ஞூண்டு படுத்தியது.
இருந்தாலும் மனம் தளராத விக்கிரமாத்தித்யனுக்காக இந்த புது டூல். புது தட்டச்சு முறை என்றாலும் ஆர்வமிருப்பதால் முயற்சிகளை தொடர்வேன். சித்திரமும் கைப்பழக்கம், எந்தமிழும் பளாக் பக்கம்.
