எழுதி ரொம்ப நாள் ஆகி விட்டாலும் , அந்த ஆசை இன்னும் விடவில்லை. எப்படியாவது ரெண்டு வரி , படிக்கிற மாதிரி இருந்தா சந்தோஷம்.
சமிபத்திய வெடிகுண்டு நிகழ்வுகள் எதுவும் நல்லத்துக்கு என்று தோனுது. வெகுளித்தனம் என்பது என் அடுப்பங்கரை வரை தான் , என் அடி வயிரை தொட்டால், என்று மக்கள் உணரும் வரை , இந்த திருவிழா தொரட்டும்.
கடந்த முன்று மாதங்களாக நடந்த விளையாட்டு திருவிழா (அதான் IPL ,French Open, Wimbledon, EURO 2008 ), இல்லாமல் சேனல் மாற்றம் யுக்தி இல்லாமல் தவிக்கிறது எங்கள் வீட்டு ரிமோட். எல்லாம் ஒலிம்பிக்ஸ் வரும் வரை தான்.
ஆடி காத்து , உஸ்மான் ரோடு அழைத்தது. ஆனால் அந்த பழைய பொலிவு இல்லை. இங்கே CMH ரோடும் மரங்கள் இல்லாமல் கலை இழந்து நிற்கிறது. பெங்களுரும் , நகரமயமாக்கலுக்கு (உச்சகட்ட) தப்பவில்லை.
