பொது, பினாத்தல்January 12, 2009 8:01 pm

அடுத்த வருடம் வருவதற்கு இன்னும் முன்னூறு சொச்ச நாட்கள் இருந்தாலும் , புது வருட தீர்மானமாக ஏதாவது எழுதியாகணும்.

நிறைய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் விதமாக சந்தோஷங்களும் துக்கங்களும் நிரம்பிய வருடம்.

நான் அப்பாவானதும் , அதற்கு சிறிதும் பிரயதனபடாமல் ,மனைவியை வேதனைக்குள்ளாக்கி ,என்னால் குடுக்க முடிந்த அருகாமை என்ற ஓன்றுக்காக மட்டும் திருச்சிக்கும் பெங்களுருக்கும் அலைந்தது புதிது. நிதானத்தை இழந்து தவறிழைத்து பின்பு வருத்தப்பட்டது எல்லாமே ஓரு நாடக டிவிஸ்ட் தான்.

பெயர் வைக்க எல்லாரிடமும் போராடுவேன் என்று எண்ணியதும் பொய்த்து விட்டது.ஒழுங்கு என்ற வார்த்தை தினசரி நடவடிக்கையில் ஒன்றானது. பெருத்த ஏமாற்றம் வந்தாலும் மீண்டு வந்தது புத்துணர்ச்சி அளிக்கிறது.

ஷங்கர் எந்திரனுக்காக மூன்று தயாரிப்பாளர் மாறினார். சூப்பர் ஸ்டார் ‘கடமையை செய், பலனை எதிர்பார்’ என்றார். முருகதாஸ் பாலிவுட் சென்றார்.ராமதாஸ் புகைப்பது தவறு, விற்பது தவறில்லை என்றார். சூர்யா அப்பவானார்.கமலின் தசாவதாரம் தான் தன் வாரண முயற்சிக்கு முன்னுதாரணம் என்றார்.

ஸ்டாலினும் அழகிரியும் கோபாலபுரத்தில் கலைஞராஷ்டமி நடத்தினர். தமிழர்கள் டெலிபோனினார்கள், டெடிக்கேட் செய்தனர். ஆங்காங்கே குண்டு போடப்பட்டது. இந்தியர்கள் தலையில் மதச்சார்பிண்மை என்ற பேரில் மிளகாய் அரைக்கப்பட்டது.

பிஜேபி ராஜஸ்தானில் தோற்றது, காங்கிரஸ் டெல்லியில் வென்றது.

சத்யம் பொய்த்தது, பொய்க்காமல் மழை விவசாயிகளின் வயிற்றில் அடித்தது. பெங்களுர் பெங்களூரு ஆனது. குண்டு குழிகள் சீர் செய்யப்பட்டன. இந்தியா தங்கம் வென்றது,மீடியா கவரேஜ் செய்தது. மும்பை போர் பூமியானது,மீடியா தீவிரவாதிகளை கவர் செய்தது. மக்கள் வீட்டைத்தாண்டி இந்தியா கேட் வந்தார்கள். கோஷமிட்டார்கள் , ஏ.கே.47 கேட்டார்கள். விலைவாசி ஏறியது,பணவீக்கம் இரண்டு டிஜிட்டைத் தாண்டியது.

மொத்ததில் மக்களின் பொறுமை சோதிக்கப்பட்டது.இந்திய பொதுஜனம் இனியும் பொறுக்குமா தெரிவில்லை. வரும் பொதுத்தேர்தல் தான் அதற்கு விடை சொல்ல வேண்டும்

பழையன கழிதலும் புதியன் புகுதலும் கால வகையினானெ. இது புத்தாண்டு தீர்மானம போல் தோன்றினாலும் , நம்ம கலைஞருக்காக இந்த பொங்க போகி புத்தாண்டில் இதை நினைவில் கொள்கிறேன்.

பி.கு.: யாருடைய எழுத்து நடை என்று யுகிக்க முடிந்தவர்கள்,முதல் பத்தி தாண்ட மாட்டார்கள், யுகிக்க முடியாதவர்கள் தமிழ் படிக்க தெரிந்திருக்க மாட்டார்கள்.

Related post : கிச்சடி (ஊசிப்போன)

பொது, பினாத்தல், சினிமாOctober 15, 2008 5:13 am

இந்த வெள்ளோட்டத்தில் என்னையும் இணைத்து கொள்கிறேன்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
சகல கலா வல்லவன் வந்த சமயம்.

2. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
சூப்பர் ஸ்டாரின் ‘சிவா’. நினைவு சின்னம் மற்றும் மை டியர் குட்டி சாத்தான் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்க இதற்கு தான் டிக்கெட் கிடைத்தது.

3. என்ன உணர்ந்தீர்கள்?
டைட்டில் கார்டு மிஸ் செய்யவில்லை என்பதை. எப்படி இப்படி ஒரு படம் எடுத்தார்கள் என்று பாராட்டவும் (பின்னாளில் திட்டவும் ) வசதி பட்டது.

4. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா . ஒரு த்ரில்லர் படத்தை நகைச்சுவை கொண்டு , கொன்றுவிட்டார்கள் என்று தோன்றியது.

5. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சுப்ரமணியபுரம்.
இப்படிப்பட்ட நல்ல படங்களை சென்னை தேவியில், படம் வெளி வந்த பத்தாவது நாள் , எந்த விமர்சனமும் படிக்காமல் பார்க்க கடவது என்று
ஆண்டவனை பிராத்தனை செய்தேன்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இல்லை அல்லது இஷ்டமில்லை என்று வைத்துக்கொள்ளலாம்.

7. தமிழ்ச்சினிமா இசை?
Dhool.com SOTD மேல் மட்டும் ஒரு தனி பிரியம்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
Boot polish, எத்தகைய தாக்கம் என்றால் , படத்தின் நாயகனுக்காக தேம்பி தேம்பி அழுதது.

9. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?
ரஜினியின் ஜெ.க்கு எதிரான அறிக்கை.

10. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
கிளேசேவாக தோன்றினாலும் மைடியர் குட்டிச்சத்தனின் 3D சினிமா.

11. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை ஆனால் இஷ்டமுண்டு என்று வைத்துக்கொள்ளலாம். தமிழ்ச்சினிமா மேம்பட வி. சி.டியில் பார்க்காமல் 180+ 90 + 15 கொடுக்க தயார்.

12. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நன்றாக இருக்கிறது என்று நண்பர் வட்டாரத்துக்குள் மட்டும் தம்பட்டம் அடிக்க ஆசை.

13. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இருக்கவே இருக்கிறது கருப்பு வெள்ளை படங்கள், மற்றும் பேசும் படம் பேசாமல் இருக்கும் என்ற நப்பாசை.

பொது, பினாத்தல், TamilAugust 1, 2008 5:04 am

எழுதி ரொம்ப நாள் ஆகி விட்டாலும் , அந்த ஆசை இன்னும் விடவில்லை. எப்படியாவது ரெண்டு வரி , படிக்கிற மாதிரி இருந்தா சந்தோஷம்.

சமிபத்திய வெடிகுண்டு நிகழ்வுகள் எதுவும் நல்லத்துக்கு என்று தோனுது. வெகுளித்தனம் என்பது என் அடுப்பங்கரை வரை தான் , என் அடி வயிரை தொட்டால், என்று மக்கள் உணரும் வரை , இந்த திருவிழா தொரட்டும்.

கடந்த முன்று மாதங்களாக நடந்த விளையாட்டு திருவிழா (அதான் IPL ,French Open, Wimbledon, EURO 2008 ), இல்லாமல் சேனல் மாற்றம் யுக்தி இல்லாமல் தவிக்கிறது எங்கள் வீட்டு ரிமோட். எல்லாம் ஒலிம்பிக்ஸ் வரும் வரை தான்.

ஆடி காத்து , உஸ்மான் ரோடு அழைத்தது. ஆனால் அந்த பழைய பொலிவு இல்லை. இங்கே CMH ரோடும் மரங்கள் இல்லாமல் கலை இழந்து நிற்கிறது. பெங்களுரும் , நகரமயமாக்கலுக்கு (உச்சகட்ட) தப்பவில்லை.

பொது, பினாத்தல், TamilMay 25, 2006 7:14 pm

மாசாமாசம் நான் படியேறும் இசைக்கோயில். இளையராஜாவின் பாந்தமான முகமும், மைக்கேல் ஜாக்ஸ்சனின் கத்திரி முடியும் ஒருங்கே காட்சிச்தரும் உற்சவத் தேரோட்டம்.

இது என்ன பாட்டு ஜிக்கு புக்கு ரெயிலு ஒண்ணுமே புரியல, இங்கிலீஷ் பாட்டு மாரி இருக்கு.

இது மைக்கேல் ஜாக்ஸ்சன் சரி , அது யார் ஜானட்?

எவ்வளவு தடவ சொல்றது கடைசிலே இங்கிலீஷ் போடாதீங்க, கேப் இருந்தா பரவால்ல.

எத்தன கேஸட் போட்டாலும் தீராது ,மொட்ட மொட்டதான்.

பாக்கெட் மணி இல்லாட்டாலும் ரெக்கார்டு புக் வாங்கணும்ன்னு சொல்லிட்டு ஒரு 60க்கோ ஒரு 90க்கோ பாட்டு லிஸ்ட் எழுதி கொடுத்துட்டு வருவோம். டிரிபிள் கொஞ்சம் போதும் , பேஸ் அதிமாக வேணும் இப்படி ஏகப்பட்ட அறிவுரைகள் காதில் வாங்கப்படாது என்று தெரிந்தும் கொட்டி விட்டு வருவோம்.

பதிவாயிட்டு வரும் வரையில் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள். 23 ஜீலை திபாவளி பட ரிலீஸ் போல பரப்பரப்பு பற்றிக் கொள்ளும். கேஸட் கவர் புதுப் பொண்டாட்டி போல் அள்ளி கொள்வோம். எழுத்து கூட்டி படிக்காத குறையாக, எந்த கேஸட் கம்பெனி என்பது வரை ஆராய்வோம்.

ரிலீஸ் தேதி அன்று வீடே களேபரபடும். பட்டியலின் படி வரிசையாக பதிவாகவில்லை என்றால் அதுக்கும் அன்றே ஒரு நடை.

நான் சொன்னது மூணாவது பாட்டு, இதில நாலாவது பேத்தாஸ் ஸாங் ரெக்கார்டாகி இருக்கு. இப்பவே மாத்தி கொடுங்க.

உங்க அதிர்ஷ்டத்தைப் பொருத்து அன்று யேசுதாஸின் ரசிகர் வராமல் இருந்தால், அப்பா (கடை ஒனர்) பிஸியாக இல்லாமல் இருந்தால், உங்கள் கேஸட் புதியதாக இருந்தால்.

தொடரும் ..

பொது, பினாத்தல், TamilMay 23, 2006 6:45 pm

உனக்கென பிறந்தது உனக்கேதான்
கிடைச்சத வைச்சுக்கோ அவ்வளவு தான்
நடப்பதுதான் நடப்பதுதான் - உண்மை
விடியும் பார் விடியும் பார்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

நீ விரும்பற பொண்ண விட உன்ன விரும்பற பொண்ண காதலி. வாழ்க்கை நல்லாயிருக்கும்.

காதல் என்பது எது வரை கல்யாணம் காலம் வரும் வரை
கல்யாணம் என்பது எது வரை கழுத்தினில் தாலி விழும் வரை

பொது, பினாத்தல், TamilMay 22, 2006 6:22 pm

Where were you?
நிஜமாகவே மறந்து போய்டுமோன்னு பயமா இருக்கு. பழைய பதிவுகளை பாத்ததுக்கப்புறம் ஒரு தெம்பு. அட நாம கிறுக்கனாதா இதுன்னு ஒரு கிளுகிளுப்பு. இந்த சாக்குல ஒரு பதிவு ரெடி.

தொடர்ந்து எழுதாததற்கு காரணம் கம்பெனி மாறுனது தான். என்னோட தமிழ் தரவுகள் எல்லாம் காலி. முரசு ப்ள்க்கின் நோட்பேடில் ஏனோ வேலை செய்ய மறுக்கிறது. சுரதா கொஞ்ஞூண்டு படுத்தியது.

இருந்தாலும் மனம் தளராத விக்கிரமாத்தித்யனுக்காக இந்த புது டூல். புது தட்டச்சு முறை என்றாலும் ஆர்வமிருப்பதால் முயற்சிகளை தொடர்வேன். சித்திரமும் கைப்பழக்கம், எந்தமிழும் பளாக் பக்கம்.

பினாத்தல், TamilDecember 12, 2005 7:04 am

ரயில் எவ்வளவு வேகமா போனாலும் கடைசி பெட்டி கடைசியாத்தான் போகும்.

செல்லுல balance இல்லனா கால் பண்ண முடியாது, ஆனா… மனுஷனுக்கு கால் இல்லன்னா balance பண்ண முடியாது.

பஸ் போய்ட்டா பஸ் stand அங்கயே தான் இருக்கும் , ஆனா சைக்கிள் போய்ட்டா சைக்கிள் stand கூடவே வரும்.

Filesன்னா ஒக்காந்து பாக்கணும் ,ஆனா Pilesன்னா பாத்து ஒக்காரணும்.

கட்டில் ஒடஞ்சா படுக்க முடியாது, கண்ணாடி ஒடஞ்சா பாக்க முடியாது, ஆனா முட்டை ஒடஞ்சா தான் ஆம்லெட் போட முடியும்.

வாயால நாய்ன்னு சொல்ல முடியும் ,ஆனா நாயால வாய்ன்னு சொல்ல முடியுமா?

பானை காலியா இருந்தாலும் ஓட்ட இல்லாம இருந்தாதான் மதிப்பு.

ஒரு கடலே இருந்தாலும் கையில டம்ளர் இருந்தா ஒரு டம்ளர் தான் புடிக்க முடியும்.

நேரம் சரியில்லன்னா ஒட்டகத்து மேல ஒக்காந்தாலும் நாய் கடிச்சு வைக்குமாம்.

பினாத்தல்August 1, 2005 8:04 am

நிஜம்மா அப்படின்னு நீங்க கேக்கறது எனக்கு புரியுது. நேத்து லாண்டமார்க் போயிருந்தேன். நம்ம தான் இப்ப புத்தகப்புழு ஆகிடோம்ல. கடசியா வாங்க புஸ்தகம் இன்னும் பாதி பக்கம் படிக்காம இருக்க, புழுக்கு பசிக்க ஆரம்பிச்சிருச்சு. புதுசா புஸ்தக வாங்க போன யடத்துல பெரிய அதிர்ச்சி. அதிர்ச்சிக்கு காரணம் , ரண்டு வார முன்ன பிக் பாங்க் வாங்க வந்தப்ப அங்க ஓரே காப்பிதான் இருந்துச்சு. ஆனா நேத்து வரிச வரிசயா அடுக்கி வச்சிருந்துச்சு. அத பாக்கையில நமக்கு ஓரே குஷிதான். அதத்தான் நானு சொல்ல வரேன். நா தொட்டதெல்லாம் தொலங்குதுன்னு :)